உள்ளூர் செய்திகள்
குரூப் தேர்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
- குரூப் தேர்வுகளுக்காக பவித்ரா வீட்டில் இருந்து படித்து வந்தார்.
- பவித்ரா கடந்த 3 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை:
டவுன் தர்மராஜாகோவில் தெருவை சேர்ந்தவர் ரவிராஜ். இவரது மகள் பவித்ரா(வயது 18) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு குரூப் தேர்வுகளுக்காக வீட்டில் இருந்து படித்து வந்தார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்நிலையில் பவித்ரா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பவித்ராவுக்கு கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.