உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி

Published On 2022-08-27 08:55 GMT   |   Update On 2022-08-27 08:55 GMT
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • பிரசவ காலத்தில் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும், மனமும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும்.

நாகப்பட்டினம்:

நாகையில் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி;

காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களும் வழங்கப்பட்டது

நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரசவ காலத்தில் யோகா உள்ளிட்ட மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும் மனமும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 52- கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News