உள்ளூர் செய்திகள்

திங்களூர் கைலாசநாதர் கோவிலில் நாளை யாகம்

Published On 2023-07-13 13:44 IST   |   Update On 2023-07-13 13:44:00 IST
  • சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு சந்திரன் தலத்தில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் துரை கோவிந்தராஜ்

வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது.

அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து யாகமும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News