உள்ளூர் செய்திகள்

சுற்றுலாவில் ஆய்வு மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

தஞ்சையில், உலக பாரம்பரிய வார சுற்றுலா

Published On 2023-11-25 09:46 GMT   |   Update On 2023-11-25 09:46 GMT
  • பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.
  • உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய வார தொடர் நிகழ்வுகளின் நிறைவாக இன்று இந்திய சுற்றுலாவுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நடைபெற்ற பாரம்பரிய சுற்றுலா நிகழ்வினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

இந்த சுற்றுலாவில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், இன்டாக் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு பெற்ற இடங்களான திருப்பா லைத்துறை நெற்களஞ்சியம், திருப்புள்ளமங்கை கோவில், திருவையாறு காவிரி படித்துறை, திரிச்சினம்பூண்டி கோவில், ஒரத்தநாடு முத்தாம்பால் சத்திரம், மனோஜிபட்டி உப்பரிகை, ராஜா கோரி கைலாஷ் மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.

இந்த பாரம்பரிய சுற்றுலாவினை வரலாற்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ், தொல்லியல் பாதுகாவலர் முனைவர் பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் வழி நடத்தினர்.

Tags:    

Similar News