உள்ளூர் செய்திகள்
மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்கக்கோரி தொழிலாளர்கள் மனு
- அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டும், மனவேதனையுடனும் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து கொண்டிருக்கிறோம்.
- மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணாக்கு வாங்க கூட பணம் இல்லாமல் பராமரிப்பு இன்றி கால்நடைகள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறைஅடுத்து மணல்மேடு பகுதி திருவா ளப்புத்தூர் மாட்டு வண்டி ஓட்டுனர் சங்கத்தினர் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க மனு கொடுத்து வருகிறோம். அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்ட ப்பட்டும், மனவேதனையு டனும் போதிய வருமா னம் இல்லாமல்வறுமை யில் இருந்து கொண்டிரு க்கிறோம். மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணா க்கு வாங்கி கூட பணம் இல்லா மல் பராமரிப்பு இன்றி கால்ந டைகள் சிரமப்பட்டு கொ ண்டிருக்கிறது. எங்களுடைய வாழ்வா தாரமே கேள்வி க்குறியாகி உள்ளது. எனவே மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.