உள்ளூர் செய்திகள்
- கோவில்பத்து கிராமத்திலுள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் வேலை பார்த்து வந்தார்.
- வெள்ளப்பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மண்அள்ளும் எந்திரம் மோதி படுகாயமடைந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரியை சேர்ந்தவர் சிவமணி (வயது30).
இவர் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும்வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19ம் தேதி பணி முடித்து வெள்ளப் பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் எந்திரம் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்கசை பெற்று வந்த சிவமணி கடந்த 23ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.