பாளை அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
- ஆறுமுகம் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
- ஆறுமுகம் உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
நெல்லை:
பாளையை அடுத்த சீவலப்பேரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
குடிப்பழக்கம்
ஆறுமுகம் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதற்காக நெல்லையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஆறுமுகத்தின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னையில் வசித்து வரும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோருடன் வசித்து வந்த ஆறுமுகம் மதுரையில் வசித்து வரும் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு நேற்றுமுன்தினம் இரவு ஊருக்கு வந்துள்ளார்.
தற்கொலை
அதன் பின்னர் நேற்று திடீரென வீட்டிலிருந்து மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.