உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- சுப்பிரமணி.அவரது மகன் பாலு தொழிலாளியான இவர் மதுபோதையில் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலு இறந்தார்
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி.அவரது மகன் பாலு(வயது 29). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மதுபோதையில் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலு இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை? இது குறித்து பாலுவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.