உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை

Published On 2023-11-03 08:57 GMT   |   Update On 2023-11-03 08:57 GMT
  • நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
  • ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கல்லட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.

ஊராட்சி தலைவர் டி.டி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சதிஷ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமசபை கூட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆன்லைனில் வரி செலுத்துவது, துாய்மை பாரத இயக்கம், தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஊட்டியில் நடைபெறும் மெகா வேலைவாயப்பு முகாமில் உல்லத்தி ஊராட்சியில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் கல்லட்டி சதுக்கம்- சோலடா இடையே ஆத்திக்கல் சாலை வரை நெடுஞ்சாலை பாராமரிப்பு பணிக்க ஒப்படைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News