உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக்கை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை

Published On 2022-07-08 09:08 GMT   |   Update On 2022-07-08 09:08 GMT
  • முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
  • நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை நகர போலீஸ் நிலையத்தின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் சாலையோரத்தில்நின்று மது அருந்துவதுபோன்ற சட்ட விரோத செயல்க ளில் ஈடுபடுவதால்கோவி லுக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாண விகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன் ல்களையும் சந்தித்து வருகி ன்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை உடனடி யாக மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் கூறியதை தொட ர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News