உள்ளூர் செய்திகள்
சர்க்கரை நோயால் அவதிபட்ட பெண் தற்கொலை
- கடந்த 15 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்துள்ளார்.
- மன விரக்தியடைந்த மகாலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்த கெம்பன்னா மகள் மகாலட்சுமி (வயது33). இவர் கடந்த 15 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மன விரக்தியடைந்த மகாலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.