உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-09-28 10:28 GMT   |   Update On 2022-09-28 10:28 GMT
  • மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கோவை, செப்.28-

கோவை சூலூர் பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34).

இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

அதனை அவர் சரியாக திருப்பி தரமால் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் ஹேமலதாவிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட வேதனையில் ஹேமலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   

Tags:    

Similar News