உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது
- தனது வீட்டின் முன்பு திருட்டுதனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
- தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது சென்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
இவரது மனைவி அம்சவள்ளி (வயது 57). இவர் தனது வீட்டின் முன்பு திருட்டு தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்த அம்சவள்ளியை கைது செய்தனர்.