உள்ளூர் செய்திகள்

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்பெண்கள் சாலை மறியல்

Published On 2023-06-11 14:53 IST   |   Update On 2023-06-11 14:53:00 IST
  • 20 பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
  • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் ரோட்டு தெருவை சேர்ந்த பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மடப்பட்டு- திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் 20 பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரோஸ்மா சக்கரவர்த்தி சாலை மறிய லில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோட்டார் சரி செய்யப்பட்டு குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறி யதன் பேரில் சாலை மறி யலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News