உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடக்கம்-காற்றாலை மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகா வாட்டாக உயர்வு

Published On 2023-02-23 09:37 GMT   |   Update On 2023-02-23 09:37 GMT
  • காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
  • இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை,

அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் காற்றாலை கட்டமைப்பு வசதி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மின் உற்பத்திக்கான கட்டமைப்பு 8,500 மெகாவாட்டாக இருந்தது. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் காரணமாக உள்கட்டமைப்பு வசதி படிப்படியாக உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்தது.

தற்போது 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் நிலையாக இல்லை. இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் வரை நீடிக்கும். எனவே கோடை காலத்தில் தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News