உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே விதவைக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலியல் தொல்லை
- விதவை பெண்ணின் கண வருக்கு ஒறையூர்கிராமத்தில் சொந்தமானகாலி மனை உள்ளது.
- விதவைப் பெண்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓறையூர்கிராமத்தை சேர்ந்த 47 வயது விதவை பெண் 2 குழந்தைகளுடன் வசித்தார். அவரது கணவர் இல்லாததால் தாய் வீடான மாளிகைமேடு ஏரிப்பா ளையத்திற்கு சென்று விட்டார். விதவை பெண்ணின் கண வருக்கு ஒறையூர்கிராமத்தில் சொந்தமானகாலி மனை உள்ளது.
இந்த மனையை விற்பனை செய்வதற்காக கணவரின் இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ஓறையூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்தை அணுகி உள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் சீணடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விதவைப் பெண்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.