உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை

Published On 2022-12-11 09:08 GMT   |   Update On 2022-12-11 09:08 GMT
  • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • கருப்பாநதி அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தென்காசி:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் பகுதியில் 9.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாபநாசம் பகுதியில் 4, மணிமுத்தாறில் 4.6, சேர்வலாறு அணை பகுதியில் 4, சேரன்மகாதேவியில் 3.4, பாளையில் 1, நெல்லையில 0.4, அம்பாசமுத்திரத்தில் 3, நாங்குநேரியில் 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் 2, அடவி நயினார் கோவில் பகுதியில் 2, ஆய்க்குடியில் 2, சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News