உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே எரித்து கொல்லப்பட்ட வாலிபர் யார்?-மாயமானவர்கள் பட்டியல் மூலம் போலீசார் விசாரணை

Published On 2022-07-21 09:59 GMT   |   Update On 2022-07-21 09:59 GMT
  • எரிக்கப்பட்ட வாலிபரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்கள் வரை மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் ஒரு குளத்தின் அருகே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது.

எரித்துக்கொலை

இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் பெட்ரோல் வாசனை அடித்தது. மேலும் ஒரு பெட்ரோல் கேனும் கிடந்தது.

இதனால் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அந்த வாலிபர் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமானவர்கள் பட்டியல்

கொலை செய்து எரிக்கப்பட்ட அந்த வாலிபரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்கள் வரை மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சுமார் 35 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் மாயமானது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் ஆராய்ந்து அவர்களின் உறவினர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணை

இதற்கிடையே சம்பவம் நடந்த நாளில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதேனும் நபர்கள் சுற்றி திரிந்தார்களா? அல்லது வாகனங்கள் சென்று வந்தனவா என்பது குறித்தும் அந்த பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News