தமிழ்நாடு

ரத்த காயங்களுடன் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கிடக்கும் வாலிபரை படத்தில் காணலாம்.

தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம்- கொலையா? போலீசார் விசாரணை

Published On 2023-10-29 05:57 GMT   |   Update On 2023-10-29 05:59 GMT
  • இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
  • இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த நத்தக்கடையூர் செல்லும் வழியில் கண்ணமாபுரம் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தோட்டத்தில் இன்று காலை சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.

நேற்று இரவு அந்த வாலிபர் மற்றும் அவருடன் வந்த சிலர் தோட்டத்தில் வைத்து மது அருந்தி இருக்கலாம் என்றும் இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

அவரது உடலை மீட்ட அரச்சலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அரச்சலூர் போலீசார் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News