உள்ளூர் செய்திகள்

ஒலிம்பியாட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கேடயம் வழங்கிய காட்சி.

ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவி சாதனை

Published On 2022-12-24 09:24 GMT   |   Update On 2022-12-24 09:24 GMT
  • ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் உலக அளவில் பல பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
  • வி.எஸ்.ஆர். பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மாணவி லாவண்யா பாஸ்கருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார்

நெல்லை:

2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் உலக அளவில் பல பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளி மாணவி லாவண்யா பாஸ்கர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான மதிப்பெண் பட்டியலில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி செய்யப்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை கவுரவிக்கும் விதமாக வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மாணவிக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News