உள்ளூர் செய்திகள்

எலி விழுந்த உணவை சாப்பிட்ட 21 தொழிலாளர்களுக்கு வாந்தி-மயக்கம்

Published On 2023-01-06 03:43 GMT   |   Update On 2023-01-06 03:43 GMT
  • சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
  • உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் 2-வது நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படும். அந்த வகையில் நேற்று காலை தொழிலாளர்களுக்கு இட்லி, பூரி, தயிர் சாதம், வடை வழங்கப்பட்டது. இதை சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.

இதனால் பதறிய அந்த ஊழியர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே அங்கிருந்த சக தொழிலாளர்கள் 21 தொழிலாளர்களையும் மீட்டு என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News