உள்ளூர் செய்திகள்
- வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்திய பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- மற்றொரு பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் முருகன் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி ஜெயக்கொடி (36). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு 2 பத்திரங்களை எழுதி கொடுத்து ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.
அதன் பின்னர் 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் விஜயலட்சுமியிடம் வாங்கியுள்ளார். அதற்கு கடந்த 4 ஆண்டுகளாக ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் வட்டியாக செலுத்தி உள்ளார்.
அதன் பின்னரும் விஜயலட்சுமி கூடுதல் வட்டி கேட்டு ஜெயக்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயக்கொடி விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.