உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல்

Published On 2022-09-20 08:01 GMT   |   Update On 2022-09-20 08:01 GMT
  • விருதுநகர் அருகே வத்திராயிருப்பில் போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
  • இது சம்பந்தமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முனியாண்டி. இவர் சம்பவத்தன்று வ.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாரதி, ரஞ்சித்குமார், முத்துகுமார், வசந்த், வினீத் ஆகிய 5 பேர் அந்த பகுதியில் ரோந்து வரக்கூடாது என போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் போலீஸ்காரர் முனியாண்டி மீது கம்பு, கற்களை வீசி அந்த கும்பல் தாக்கியுள்ளது.

இதுகுறித்து முனியாண்டி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில் மேற்கண்ட 5 பேர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கல்வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News