உள்ளூர் செய்திகள்

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2022-09-20 13:24 IST   |   Update On 2022-09-20 13:24:00 IST
  • விருதுநகர் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
  • இதுகுறித்து வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகளும் செங்கமல நாச்சியார்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மலர்கொடியின் மகள் தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்து விட்டார். இங்கிருந்து அவர் தனியார் கிளினீக் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மகளை அழைத்து கொண்டு வேலைக்கு சென்ற இளம் பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மலர்கொடி வச்சக்காரபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை இ.முத்துலிங்காபுரத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News