உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2022-07-29 09:22 GMT   |   Update On 2022-07-29 09:22 GMT
  • ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  • 2-வது சனிக்கிழமையான 13-ந் தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த திருவிழா கடந்த 24-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் வருகிற 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்டு மாதத்தின் 2-வது சனிக்கிழமையான 13-ந்தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News