உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2023-02-17 13:56 IST   |   Update On 2023-02-17 13:56:00 IST
  • ராஜபாளைய போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
  • வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சீனிவாசன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் தென்காசி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் மற்றொரு வாலிபரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தெற்கு வெங்காநல்லூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சக்தி கருப்பசாமி (வயது 23) என தெரியவந்தது.

அந்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் இருக்கவைத்து விட்டு அவர்கள் மீண்டும் ரோந்துப் பணிக்கு சென்றனர். அப்போது அங்கு ரமேஷ் என்ற காவலர் மட்டும் எழுத்தர் அறையில் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் சக்தி கருப்பசாமி தனது கழுத்தில் அணிந்திருந்த டாலரில் வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து கழுத்து, மார்பு, கைகளில் கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்ட காவலர் ரமேஷ் ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது கத்தியை வைத்து மேலும் கிழித்துக்கொள்ள அந்த வாலிபர் முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த ரமேஷ், அவரை தடுத்து அவர் கையிலிருந்த கத்தியை பிடுங்கிவைத்து வாலிபரை எச்சரித்து அமரவைத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News