உள்ளூர் செய்திகள்
நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த வாலிபர் கைது
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திக் (வயது24). இவரிடம் வனவிலங்குகள் வேட்டையாட கூடிய நாட்டு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து நேற்றிரவு கார்த்திக் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து, வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கார்த்திக் மீது வனத்துறையில் ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது.