உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2022-09-11 08:22 GMT   |   Update On 2022-09-11 08:22 GMT
  • ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமாதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
  • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28), கொத்தனார். இவரது மனைவி அழகேஸ்வரி (27). இவர்களுக்கு சக்திகுமார் (5), சசிகுமார் (3) என்ற மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 4 நாட்களாக வெம்ப க்கோட்டை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போதுஅவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

Tags:    

Similar News