உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2023-05-22 08:40 GMT   |   Update On 2023-05-22 08:40 GMT
  • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55), தச்சு வேலை பார்த்து வந்தார். சம்ப வத்தன்று வேலை நிமிர்த்த மாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த ராஜேந்திரன் அங்குள்ள நகராட்சி கழிவறை அருகே மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News