உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-06-14 13:25 IST   |   Update On 2023-06-14 13:25:00 IST
  • திருமணமான 9 மாதத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
  • இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது31). தொழிலாளியான இவருக்கும், லட்சுமி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பால்பாண்டிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடியவு செய்தார். சம்பவத்தன்று இரவு மனைவிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டின் தனியறைக்கு சென்ற பால்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News