உள்ளூர் செய்திகள்

கட்டிட வேலை பார்த்த பெண் தவறி விழுந்துசாவு

Published On 2022-06-24 08:38 GMT   |   Update On 2022-06-24 08:38 GMT
  • கட்டிட வேலை பார்த்த பெண் தவறி விழுந்து பலியானார்.
  • ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 65). இவர் தனியார் நிறுனத்தில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். அவர் ராஜபாளையத்தில் டிராவல்ஸ் கட்டிட 2-வது மாடியில் பணி செய்த போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அப்ேபாது கீழே செயல்பட்ட புரோட்டா கடை மேற்கூரையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News