உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி பெண் சாவு

Published On 2023-04-26 07:55 GMT   |   Update On 2023-04-26 07:55 GMT
  • இடி தாக்கி பெண் இறந்தார்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தராபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது23). இவரது தாய் பொன்னுத்தாய் (50). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். நேற்று அந்தப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வேலைக்கு சென்ற தனது தாயை அழைத்து வருவதற்காக சங்கீதா சென்றார். பின்னர் பொன்னுத்தாய் மற்றும் அவருடன் வேலை பார்த்து வருபவர்களும் சேர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த சமுத்திரகனி(15), கிருஷ்ணவேணி(19), முத்துமாரி(37) மற்றும் சங்கீதா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ்குமார் (43). இவர் மழை பெய்தபோது தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் வைத்து பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் பசு மாடு இறந்தது. காயமடைந்த போஸ்குமாரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Tags:    

Similar News