- மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க நகைகள் திருட்டுப்பட்டது.
- தேவகோட்டை நகர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை மாணிக்க விளாஸ் வீதியைச் சேர்ந்த சிதம்பரம். இவரது மனைவி தெய்வானை (வயது 80). இவர் கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்ேபாது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மூதாட்டியிடம் நாங்கள் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு, நேற்று இதே பகுதியில் திருடர்கள் வயதான பெண்களிடம் நகைகளை பறித்து சென்று விட்டார்கள். உங்களுடைய நகைகளை மணிபர்சில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.
மேலும் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயின், கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையல்கள், 2 கழட்டி ஆகியவற்றை ஒரு மணி பர்சில் வைத்து பத்திரமாக கொண்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.
மூதாட்டி வீட்டுக்கு சென்று அந்த பர்சை திறந்து பார்த்த ேபாது தனது நகைகள் அதில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை நகர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
தேவகோட்டை நகரில் இதே முறையில் நூதன திருட்டு 2 முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் 11 பவுன் நகை திருடு போனதும் குறிப்பிடத்தக்கது.