உள்ளூர் செய்திகள்
- விபத்தில் சிக்கிய வாலிபர் பலியானார்.
- திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.
விருதுநகர்
சிவகாசி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா (வயது19). இவரது சகோதரர் பார்த்தசாரதி (22). இவர்கள் இருவரும் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்தனர். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் தேசிங்கு ராஜாவுக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் செல்லும் வழியில் தேசிங்குராஜா இறந்தார்.
இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.