உள்ளூர் செய்திகள்

இளம்பெண்-கல்லூரி மாணவர் மாயம்

Published On 2023-05-05 08:13 GMT   |   Update On 2023-05-05 08:13 GMT
  • விருதுநகர் அருகே இளம்பெண்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கிலி, டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது22) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் சங்கிலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் கற்பகலட்சுமி. இவரது மகன் கார்த்திகேயன். இவர் அங்குள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 16-ந் தேதி அன்று இவர் திடீரென மாயமானார்.

இதைத் தொடர்ந்து கற்பக லட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் கார்த்திகேயன் தனது காதலியை தேடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் கற்பக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News