உள்ளூர் செய்திகள்

கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்களை படத்தில் காணலாம்.

கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

Published On 2022-06-20 08:36 GMT   |   Update On 2022-06-20 08:36 GMT
  • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவ, மாணவியர்கள்.
  • தமிழக அரசின் வேலை வாய்ப்பில் சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது.

வத்திராயிருப்பு

தமிழக அரசின் வேலை வாய்ப்பில் சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்குட்பட்ட கூமாப்பட்டியில் வீரராவணன் சிலம்பக் கூடம் சார்பில் 5 வயது முதல் 18 வயது வரை உள்ள 150 மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிடத்தில் 575 தடவை சிலம்பம் சுற்றினர்.

இந்த நிகழ்வு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சிலம்பத்தில் சாதனை புரிந்த மாணவர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர். இந்த சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் சான்றிதழ்களை ஒருங்கிணைப்பாளர் மணி முத்துவிடம் வழங்கினர்.

Tags:    

Similar News