உள்ளூர் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-10-20 06:27 GMT   |   Update On 2023-10-20 06:27 GMT
  • சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
  • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

ராஜபாளையம்

தமிழக அரசின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமானது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் வருகிற (28-ந் தேதி) நடைபெற உள்ளது.

இம்முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரி விக்கப்படுகிறது.

இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://tinyurl.com/yu5728lz என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக் கப்படுகிறது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.

எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News