உள்ளூர் செய்திகள்
- விருதுநகரில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
- நியோமேக்ஸ் மோசடி குறித்து புகார் அளிக்கலாம்.
விருதுநகர்
தென் மாவட்டங்களில் நிேயாமேக்ஸ் மோசடி குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் தலைமை நிறுவனம், கிளை நிறுவனங்கள், நியோமேக்ஸ் உரிமையாளர், ஊழியர்கள் வீட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நாளை (சனிக்கிழமை) விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் புகார் அளிக்கலாம் அல்லது மதுரை பொருளாதார குற்றப்பரிவு போலீசில் புகார் செய்யலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தெரிவித்து உள்ளார்.