- சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
- பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமானது. இதில் காளிராஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாந்தி சம்பவ இடத்தில்ஆய்வு செய்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மென் முத்துகருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாசலம் (32) என்பவருக்கு சொந்தமான செட்டில் பாதுகாப்பின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.