உள்ளூர் செய்திகள்
சிறுவன்- வாலிபருக்கு அரிவாள் வெட்டு
- சிறுவன்- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வீரவேல். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி புவனேசுவரி மகன் லிவின்ஷாவுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று அங்கு வந்த வீரவேல் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வீரவேல் அரிவாளால் மனைவியை வெட்ட வந்தார். அப்போது அங்கிருந்து மகன் லிவின்ஷா, புவனேசுவரியின் சகோதரர் ஆகியோர் தடுத்தனர். இதில் 2 பேருக்கும் வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது. இது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை தேடி வருகின்றனர்.