உள்ளூர் செய்திகள்

எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா

Published On 2022-11-07 13:15 IST   |   Update On 2022-11-07 13:15:00 IST
  • அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
  • இந்த பள்ளி நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரவீந்திரன், பள்ளி தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்த ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினார். விழாவில் அருப்புக்கோட்டை உட்கோட்டஉதவி காவல் கண்காணிப்பாளர் கரன்காரட் சமாதான புறாவை பறக்க விட்டார். எஸ்.பி.கே. கல்வி நிறுவன குழு தலைவர் ஜெயக்குமார் ஒலிம்பிக் கொடியேற்றினார். கவுரவ ஆலோசகர் மனோகரன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, கோவில் டிரஸ்டி ராஜேந்திரன், உறவின்முறை துணைச் செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட உறவின்முறை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளிச்செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News