உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீர் மாயம்

Published On 2023-06-26 08:16 GMT   |   Update On 2023-06-26 08:16 GMT
  • பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீரென மாயமானார்கள்.
  • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பந்தல்கு டியில் உள்ள அரசு பள்ளி யில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதேபோல் அதே வகுப்பறையில் படிக்கும் உடையநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் வீடு திரும்பாமல் மாயமானார். 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர்

சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(22) ஆகியோர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சதீஷ்குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News