உள்ளூர் செய்திகள்

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் கடைபிடிப்பு

Published On 2022-08-10 09:23 GMT   |   Update On 2022-08-10 09:23 GMT
  • கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34-வது சங்க அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி ராஜு தலைமை தாங்கினார். சங்க கொடியை மாநில துணைத் தலைவர் மாரியப்பன் ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் குருசாமி அமைப்பு தினப் பேருரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News