உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் தற்கொலை

Published On 2023-03-31 13:54 IST   |   Update On 2023-03-31 13:54:00 IST
  • புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகள் கலைவாணி(வயது26). இவருக்கும், விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் 1 ½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று கலைவாணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிச்சைமணிக்கு போனில் கார்த்திக் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கலைவாணியின் தாய் பிச்சைமணி சூலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News