உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு எம்.பி. விருது

Published On 2023-06-16 13:37 IST   |   Update On 2023-06-16 13:37:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கு எம்.பி. விருது வழங்கினார்.
  • அரசு புதிய மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர்‌ எம்.பி ஆய்வு செய்தார்.

விருதுநகர்

சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சாத்தூர் பெரியார் நகரில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற சாத்தூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

அதை தொடர்ந்து சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு புதிய மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆய்வு செய்தார். உடன் சாத்தூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் தலைவர் நிர்மலா, சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், சின்னக்காமன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News