உள்ளூர் செய்திகள்
- விருதுநகர் அருகே குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயமானார்கள்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரியாபட்டி
காரியாபட்டி முருகையாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் மகேஸ்வரி(வயது38). கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்த மகேஸ்வரி சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் மகாலட்சுமி(28). கணவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால் இவர் தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து மகளுடன் வெளியே சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.