உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியில் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளி அணிக்கு முதல் பரிசு

Published On 2022-09-07 08:15 GMT   |   Update On 2022-09-07 08:15 GMT
  • கபடி போட்டியில் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளி அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
  • விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர்களுக்கான கபடி போட்டி சி.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில், சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியும்-வன்னிய ம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் வெற்றி பெற்ற காளீஸ்வரி அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

மம்சாபுரம் சிவந்திபட்டி மேல்நிலைப்பள்ளி அணியும்-வன்னி யம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் அணியும் மோதின. இதில் வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

Tags:    

Similar News