உள்ளூர் செய்திகள்

இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறப்பு

Published On 2022-07-12 14:06 IST   |   Update On 2022-07-12 14:06:00 IST
  • ராஜபாளையத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறக்கப்பட்டது.
  • மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம்-மதுரைரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே சிவகுலத்தோர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்பட திறப்பு விழா நடந்தது.

மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுகுநாதன் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்டமகளிரணி தலைவி தமிழ்செல்வி, நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, வனராஜ், முனியசாமி,இளைஞரணி முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News