செயல்படாத புறக்காவல் நிலையத்தை படத்தில் காணலாம்.
அருப்புக்கோட்டையில் செயல்படாத புறக்காவல் நிலையம்
- அருப்புக்கோட்டையில் செயல்படாத புறக்காவல் நிலையம் உள்ளது.
- மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை
ஆங்காங்கே நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் எல்லை பகுதிகளில் புறக்காவல் நிலையங்களை அமைத்து இரவு பகலாக போலீசார் சோதனையிடவும், சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக்கவும் புறக்காவல் நிலையங்கள் அமைக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதனை செயல்படுத்த காவல்துறை முன்வரவில்லை. நகர் காவல் நிலையம் சார்பில் நகர் எல்லையான காந்திநகர், ராமசாமிபுரம், கோபாலபுரம் விலக்கு மற்றும் பாவடி தோப்பு ஆகிய 4 பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த புறக்காவல் நிலையத்திற்கு காவலர்கள் சரிவர வருவதில்லை. இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கு காவலர்கள் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.