வருகிற 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
- விருதுநகர் மாவட்டத்தில் 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் நடக்கிறது.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவா தித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடக்கிறது.
எனவே வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.